மேற்கு ஆசியாவில் நிலவும் போர்ச் சூழல் காரணமாக பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் நடைபெற்ற பாதுகாப்பு கண்காட்சியில் தேல்ஸ் நிறுவனம் அதிநவீன ஸ்கை டிஃபெண்டர் அமைப்பை அறிமுகப்படுத்தி உள்ளது.
அமெரிக்கா, இஸ்ரேல் கூட்டாக ஈரான் மீது தாக்குதல் நடத்தி வருவதால் மேற்கு ஆசியாவில் போர் பதற்றம் நிலவி வருகிறது. உலகம் முழுவதும் அதிகரித்து வரும் டிரோன் தாக்குதல்கள் ஆகியவற்றை கருத்தில் கொண்டு பாரிஸில் நடைபெற்ற பாதுகாப்பு கண்காட்சியில் தேல்ஸ் நிறுவனம் இந்த அதிநவீன ஸ்கை டிஃபெண்டர் அமைப்பை அறிமுகப்படுத்தியுள்ளது.
இது மிகக் குறைந்த உயரத்தில் பறக்கும் ட்ரோன்கள் முதல் அதிக உயரத்தில் வரும் ஏவுகணைகள் வரை அனைத்தையும் இடைமறித்து அழிக்கும் திறன் கொண்டது. ரேடார்கள், சென்சார்கள் மற்றும் ஏவுகணை தடுப்பு ஆயுதங்கள் என அனைத்தையும் ஒரே அமைப்பின் கீழ் இந்த தொழில்நுட்பம் ஒருங்கிணைக்கிறது.
சிறிய ரக ட்ரோன்கள் மூலம் நடத்தப்படும் தாக்குதல்களைக் கண்டறிந்து, அவற்றைச் செயலிழக்கச் செய்வதில் இது தனித்துவமான ஆற்றல் கொண்டதாக உருவாக்கப்பட்டுள்ளது.
அச்சுறுத்தல்களை மிக விரைவாகக் கண்டறிந்து, எந்த வகையான ஆயுதத்தைப் பயன்படுத்தி அதைத் தடுக்க வேண்டும் என்பதை நொடிப் பொழுதில் தீர்மானிக்க இதில் AI தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது.
















