இங்கிலாந்தின் “தி ஹண்ட்ரட் கிரிக்கெட்” தொடருக்காக, சன் ரைசர்ஸ் அணி நிர்வாகம் பாகிஸ்தான் வீரரை ஏலம் எடுத்ததற்கு இந்திய ரசிகர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இங்கிலாந்தில் “தி ஹண்ட்ரட் கிரிக்கெட்” தொடருக்கான ஏலம் அண்மையில் நடைபெற்றது. , இதில் காவ்யா மாறன் உரிமையாளராக இருக்கும் சன்ரைசர்ஸ் லீட்ஸ் அணி, பாகிஸ்தான் அணியின் சுழற்பந்து வீச்சாளர் அப்ரார் அகமதுவை, 2 கோடியே 34 லட்சம் ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்தது.
காவ்யா மாறனின் இந்த முடிவுக்கு, இந்திய ரசிகர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. தேச உணர்வுக்கு எதிராக பாகிஸ்தான் வீரரை சன்ரைசர்ஸ் அணி வாங்கியதாக சமூக வலைத்தளங்களில் பலரும் விமர்சனங்களை முன்வைத்தனர்.
இந்த சர்ச்சைகளுக்கு மத்தியில், அப்ரார் அகமதுவை ஏலத்தில் எடுத்த சில மணி நேரங்களிலேயே சன்ரைசர்ஸ் லீட்ஸ் அணியின் அதிகாரப்பூர்வ எக்ஸ் கணக்கு முடக்கப்பட்டுள்ளது
















