மானாமதுரையில், போலீஸ் விசாரணையின்போது உயிரிழந்த இளைஞர் ஆகாஷ் டெலிசன் உடலில் 28 காயங்கள் இருப்பது, பிரேதப் பரிசோதனை அறிக்கையில் தெரியவந்துள்ளது.
மதுரை அரசு மருத்துவமனையில் நடந்த பிரேதப் பரிசோதனையில்,ஆகாஷ் டெலிசன் உடலில் மொத்தம் 28 வகையான வெளிப்புற மற்றும் உட்புற காயங்கள் இருப்பது பதிவாகியுள்ளது.
வலது காலின் நடுப்பகுதியில் உள்ள திபியா மற்றும் பிபுலா எலும்புகள் முறிந்துள்ளன.
கை, முழங்கை, முழங்கால், தொடை பகுதிகளில் பல இடங்களில் சிவப்பு நிற சிராய்ப்புகள், கீறல்கள் இருந்ததாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
உட்புற பரிசோதனையில், மூளையின் முன்பகுதியில் ரத்தக் கசிவு மற்றும் புள்ளி வடிவ ரத்தக் கசிவுகள் ஏற்பட்டுள்ளன.
நுரையீரல் மற்றும் இதயம் வீங்கிய நிலையில் இருந்ததாகவும் பதிவாகியுள்ளது.
இதனிடையே, ரசாயனப் பகுப்பாய்வு மற்றும் திசுப் பரிசோதனை முடிவுகள் கிடைத்தபின் இறுதி அறிக்கை வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
















