மாணவிகள் மற்றும் பணிபுரியும் பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் கட்டாய விடுப்பு வழங்கக் கோரி தொடரப்பட்ட மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
வழக்கறிஞர் சைலேந்திரமணி தாக்கல் செய்த இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள், ‘மாதவிடாய் விடுப்பைக் கட்டாயமாக்கினால், பெண்களை வேலைக்கு அமர்த்த நிறுவனங்கள் தயங்கும் என்றும், இது அவர்களின் வேலைவாய்ப்பைப் பாதிக்கும் எனவும் தெரிவித்தனர். மேலும், இத்தகைய விடுமுறை பெண்கள் ஆண்களுக்குச் சமமானவர்கள் இல்லை என்ற எண்ணத்தை உருவாக்கிவிடும் என்று குறிப்பிட்ட நீதிபதிகள், இது தொடர்பாக மத்திய அரசே கொள்கை முடிவெடுக்க வேண்டும் என்று தெரிவித்து மனுவை நிராகரித்தனர்.
















