பாஜக 400 இடங்களுக்கு மேல் வெற்றி பெற்றால் அரசியலமைப்பை மாற்றிவிடுவார்கள் என்ற போலியான கதையை எதிர்க்கட்சிகள் பரப்புவதாக மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் தெரிவித்துள்ளார்.
தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநில பாஜக ஊடகப் பிரிவினருக்கான சிறப்புப் பயிற்சி முகாம் சென்னை அமைந்தகரையில் நடைபெற்றது.
இதில் மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால், பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டு பயிற்சி முகாமை தொடங்கி வைத்தனர்.
அப்போது பேசிய அர்ஜூன் ராம் மேக்வால், பிரதமர் மோடி இடஒதுக்கீட்டிற்கு எதிரானவர் என்று AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்வதாகவும், உண்மையில், ஜவஹர்லால் நேருதான் இடஒதுக்கீட்டிற்கு எதிராக இருந்தார் என்றும் குறிப்பிட்டார்.
மேலும், பாஜக 400 இடங்களுக்கு மேல் வெற்றி பெற்றால் அரசியலமைப்பை மாற்றிவிடுவார்கள் என்பது போன்ற போலிக் கதைகளை எதிர்க்கட்சிகள் பரப்புவதாகவும், இன்றைய தேர்தல் என்பது தகவல் தொடர்பு கருவிகள் மூலம் நடத்தப்படும் போராக மாறியுள்ளதாகவும் கூறினார்.
















