திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே மாமூல் கேட்டு தராததால், ஆத்திரமடைந்த ரவுடி, மளிகைக் கடையை அடித்து நொறுக்கும் சிசிடிவி காட்சிகள் இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வேடசந்தூர் அருகே உள்ள சுக்காம்பட்டியைச் சேர்ந்த தண்டபாணி என்பவர், அதிமுக வார்டு கவுன்சிலராக பொறுப்பு வகித்து வரும் நிலையில், அவரது மனைவி அஞ்சலை மளிகைக் கடை நடத்தி வருகிறார்.
இந்நிலையில், மளிகைக் கடைக்கு வந்த பாண்டி என்ற ரவுடி, மாமூல் கேட்டு தகராறில் ஈடுபட்டுள்ளார். அஞ்சலை மாமூல் தராததால் ஆத்திரமடைந்த ரவுடி, பட்டாகத்தியால் கடையை அடித்து நொறுக்கிவிட்டு தப்பியோடியுள்ளார்.
இதுதொடர்பான புகாரின்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில், தாக்குதல் தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
















