காசாவில் வீசிய மணல் புயலால் தற்காலிக கூடாரங்களில் வசித்து வந்த மக்கள் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனர்.
மேற்காசிய நாடான இஸ்ரேல் மற்றும் காசாவின் ஹமாஸ் பயங்கரவாத அமைப்புக்கு இடையே 2 ஆண்டுகளாக நடைபெற்று வந்த போர் கடந்த அக்டோபரில் முடிவுக்கு வந்தது. இந்த போரில் காசாவை சேர்ந்த பல்லாயிரக்கணக்கானோர் உயிரிழந்தனர்.
இஸ்ரேல் தாக்குதலால் வீடுகளை இழந்த மக்கள் தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர். இந்நிலையில் காசாவில் வீசிய மணல் புயலால் தற்காலிக கூடாரங்கள் கடும் சேதமடைந்தன.
மணல் புயலால் காசா பகுதி முழுவதும் ஆரஞ்சு நிறத்தில் காட்சியளித்தது. ஏற்கனவே போரால் உருக்குலைந்த மக்கள் இயற்கையாலும் இன்னலுக்கு ஆளாகியுள்ளனர்.
















