7 ஆண்டுகளுக்கு பிறகு வெனிசுலாவில் அமெரிக்க கொடி மீண்டும் பறந்துள்ளது.
கடந்த 2018-ல் வெனிசுலாவில் நடைபெற்ற மறுதேர்தலில் நிகோலஸ் மதுரோ அதிபராக வெற்றி பெற்றதை ஏற்க அமெரிக்கா மறுப்பு தெரிவித்தது.
இதனையடுத்து அமெரிக்காவுடனான தூதரக உறவுகளை துண்டித்த நிகோலஸ் மதுரோ அரசு, அந்நாட்டின் தூதரக ஊழியர்களை வெளியேற்றியது.
பின்னர் கடந்த ஜனவரியில் வெனிசுலாவுக்குள் புகுந்த அமெரிக்க பாதுகாப்பு படையினர், நிக்கோலஸ் மதுரோவை அதிரடியாக கைது செய்தனர்.
வெனிசுலாவின் இடைக்கால அரசு நல்ல ஒத்துழைப்பு அளித்து வரும் நிலையில், கராகஸில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் 7 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் அமெரிக்க கொடி ஏற்றப்பட்டது.
















