வளைகுடா நாடுகள் மீது ஈரான் நடத்திய பதில் தாக்குதல் ஆச்சரியமளித்ததாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
வாஷிங்டனில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஈரான் இவ்வளவு தூரம் தாக்குதல் நடத்தும் என்பதை மாபெரும் நிபுணர்கள் கூட கணிக்கவில்லை என கருத்து தெரிவித்துள்ளார்.
இதனிடையே ஈரான் மீது தாக்குதல் நடத்தினால் அமெரிக்காவின் நட்பு நாடுகள் மீது அது தாக்குதல் நடத்தும் எனவும் இதனால் இருதரப்புக்கும் மிகப்பெரிய பாதிப்பு ஏற்படும் எனவும் அமெரிக்க உளவுத்துறை ஏற்கெனவே எச்சரிக்கை விடுத்திருந்ததாக ராயட்டர்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
















