புதுச்சேரி திமுக கூட்டணியில் தொகுதி பங்கீடு இன்னும் முடிவடையாத நிலையில், முதலியார்பேட்டை திமுக எம்எல்ஏ, அதே தொகுதியில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.
புதுச்சேரியில் ஏப்ரல் 9ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், இண்டி கூட்டணியில் உள்ள காங்கிரஸ், திமுக கட்சிகள் இடையே இன்னும் கூட்டணி பேச்சுவார்த்தை முடிவு பெறாமல் உள்ளது.
காரைக்காலில் உள்ள அனைத்து தொகுதிகளிலும் திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் வேட்புமனு தாக்கல் செய்ய வேண்டும் என திமுக தலைமை உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ள நிலையில், முதலியார்பேட்டை தொகுதி திமுக எம்எல்ஏ சம்பத், அதே தொகுதியில் மீண்டும் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.
இதேபோன்று, பாஜக அமைச்சர் ஜான்குமார் போட்டியிட்டு வெற்றி பெற்ற காமராஜர் நகர் தொகுதியில் போட்டியிட லட்சிய ஜனநாயக கட்சி தலைவர் ஜோஸ் சார்லஸ் மனுதாக்கல் செய்துள்ளார்.
















