நாடாளுமன்றம் செயல்படும் நாட்களை அதிகரிக்க வேண்டுமென, மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே வலியுறுத்தியுள்ளார்.
மாநிலங்களவையில் ஏப்ரல், ஜூன் மாதங்களில் 59 உறுப்பினர்கள் ஓய்வு பெறுகிறார்கள். மல்லிகார்ஜுன கார்கே, தேவகவுடா உள்ளிட்டோருக்கு பிரியாவிடை வழங்கும் நிகழ்வு நாடாளுமன்றத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் பேசிய மல்லிகார்ஜுன கார்கே ஏழைகள், விவசாயிகள் உள்ளிட்டோரின் பிரச்னைகளை அதிகமாக விவாதிக்க அனுமதிக்க வேண்டும் என்று தெரிவித்தார். எதிர்கட்சியினர் பேசும்போது அடிக்கடி பேச்சுகளை நீக்குவதை கைவிட வேண்டும் என்றும் மல்லிகார்ஜுன கார்கே கூறினார்.
















