திமுக எம்.எல்.ஏ. அன்னியூர் சிவாவுக்கு எதிராக சிபிஐ விசாரணை கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
விக்கிரவாண்டி தொகுதி எம்.எல்.ஏ-வான அன்னியூர் சிவாவுக்கு எதிராக பாஜக வழக்கறிஞர் ஜி.எஸ்.மணி இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார்.
மனுவில் எம்.எல்.ஏ. அன்னியூர் சிவா தனது தொகுதி மேம்பாட்டு நிதி மற்றும் முதல்வர் சாலை மேம்பாட்டு திட்ட நிதி உள்ளிட்ட சுமார் 34 கோடி ரூபாயை, தனது குடும்பத்துடன் தொடர்புடைய நிறுவனங்களுக்கு ஒதுக்கி முறைகேடு செய்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
மேலும், இந்த விவகாரத்தில் சிபிஐ அல்லது உயர்நீதிமன்ற கண்காணிப்பில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரணை நடத்த வேண்டும் எனவும்,
சட்டவிரோத பண பரிமாற்றத் தடைக் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மனுவில் கோரப்பட்டுள்ளது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
















