என்டிஏ கூட்டணி கட்சியினர் டெல்லி வந்தாலே முதலமைச்சர் ஸ்டாலினுக்கு பயம் ஏற்படுவதாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “டெல்லி – தமிழ்நாடு என்று பேசி இனியும் மக்களை திமுகவால் ஏமாற்ற முடியாது என தெரிவித்தார். திமுக-வை வீழ்த்த மக்கள் தயாராகிவிட்டதாக அவர் கூறினார்.
பீகார் போல் அனைவரும் ஒற்றுமையாக இருந்து தமிழ்நாட்டில் திமுகவை தோற்கடிப்போம் என்றும் அவர் தெரிவித்தார். சசிகலாவை தே.ஜ கூட்டணியில் கொண்டுவர எந்த முயற்சியும் நடைபெறவில்லை என்றும் தினகரன் விளக்கம் அளித்தார்.
















