தமிழக சட்டமன்றத் தேர்தலில், அதிமுக-வுக்கு விஷ்வகர்மா சமூக மக்கள் கட்சி ஆதரவு தெரிவித்துள்ளது.
சென்னையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை, தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரி விஷ்வகர்மா சமூக மக்கள் கட்சி நிர்வாகிகள் சந்தித்து ஆதரவு கடிதம் வழங்கினர்.
இச்சந்திப்பின்போது, விஷ்வகர்மா சமூக மக்களின் சார்பில் ஏழு அம்ச கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டதாக தெரிகிறது. அதில் முக்கியமாக, இலவச வீட்டுமனை வழங்குதல் உள்ளிட்ட கோரிக்கைகள் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.
















