ஹர்முஸ் ஜலசந்தியை திறந்துவிட வேண்டும் என ஈரானுக்கு 22 நாடுகள் கூட்டாக வலியுறுத்தியுள்ளன.
அமெரிக்க – இஸ்ரேல் – ஈரான் போர் 22 நாட்களை கடந்த நிலையில் அரபு நாடுகளில் உள்ள அமெரிக்க தளங்கள் மீது ஈரானும் வான் வழி தாக்குதல்களை நடத்தி வருகிறது. உலகின் சுமார் 20 சதவீத எண்ணெய் ஹார்முஸ் ஜலசந்தி வழியாகவே ஏற்றுமதி செய்யப்பட்டு வந்தது.
இந்தப்பாதையை மூடிய ஈரான், பின்னர் எதிரிகள் மற்றும் அவர்களை ஆதரிக்கும் நாடுகளுக்கு திறக்க மாட்டோம் எனத் தெரிவித்தது.இதனால் எண்ணெய் எரிபொருள் தட்டுப்பாடு அபாயத்தில் உலக நாடுகளும் வியாபாரம் செய்ய முடியாத நிலையில் அரபு நாடுகளும் உள்ளன.
இந்த நிலையில் பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி, ஜப்பான், ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் பஹ்ரைன் உள்ளிட்ட 22 நாடுகள் அரபு நாடுகள் மீதான தாக்குதல்களை நிறுத்துமாறும் ஹார்முஸ் ஜலசந்தியை உடனடியாக திறக்குமாறும் ஈரானை வலியுறுத்தி கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளன.
















