மேலூர் சுயேட்சை வேட்பாளர் முருகன், 18 பட்டி அம்பலகாரர்களிடம் ஆதரவு திரட்டினார்..
தமிழக சட்டப்பேரவை தேர்தல் நெருங்கியுள்ள நிலையில் அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. இந்நிலையில் மதுரை மாவட்டம் மேலூர் தொகுதியில் சுயேட்சை வேட்பாளராக களமிறங்கியுள்ள முருகன், தினமும் மக்களை சந்தித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளார்.
அந்த வகையில் மேலூரில் உள்ள காவல் தெய்வங்களான காஞ்சிவனம் சுவாமி மற்றும் சிவன் கோயிலில் வழிபாடு நடத்தினார்.
தொடர்ந்து 18 பட்டி அம்பலக்காரர்களை சந்தித்து தனது தேர்தல் நோக்கங்களை விளக்கி ஆதரவு திரட்டினார். இதுகுறித்து பேட்டியளித்த முருகன், மக்களின் நலனைக் காக்கவே மேலூர் தொகுதியில் போட்டியிடுவதாக கூறினார்.
















