புதுக்கோட்டை மாவட்டம், நார்த்தாமலை அருகே உள்ள முத்துமாரியம்மன் கோயில் பூச்சொரிதல் விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
முத்துமாரியம்மன் கோயில் பூச்செரிதல் விழாவை முன்னிட்டு புதுக்கோட்டை மாநகர பகுதிகளின் பல்வேறு இடங்களில் வீட்டு வாசல் முன்பு பூ தட்டுகளை வைத்து வழிபாடு செய்தனர்.
பின்னர், மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் ஊர்வலமாக எடுத்துவரப்பட்ட முத்துமாரியம்மன் சிலைக்கு மலர்களை தூவி பக்தர்கள் வழிபாடு நடத்தினர். இந்த நிகழ்வில் கலந்து கொண்ட 500க்கும் மேற்பட்டோருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
















