ஏப்ரல் 1ஆம் தேதி முதல் விமான எரிபொருள் விலை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இது குறித்துக் கருத்து தெரிவித்துள்ள ஏர் இந்தியா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் மற்றும் விநியோக சங்கிலி பாதிப்பு காரணமாக எரிபொருள் விலை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளார்.
ஏப்ரல் 1ம் தேதி முதல் விமான எரிபொருள் விலை அதிகரிக்கக்கூடும் என்றும்,
எரிபொருள் விலை உயர்வு என்பது தவிர்க்க முடியாத ஒன்றாக உள்ளது எனவும் கூறியுள்ளார்.
எரிபொருள் விலை உயர்வை நிறுவனங்கள் ஏற்றுக் கொண்டாலும், ஒரு குறிப்பிட்ட நிலைக்கு மேல் அது பயணிகளின் கட்டணத்தில் பிரதிபலிக்கும் என தெரிவித்துள்ளார்.
தற்போதுள்ள சூழலில் உள்நாட்டு மற்றும் சர்வதேச விமானக் கட்டணங்கள் 5 முதல் 10 சதவீதம் வரை உயர வாய்ப்புள்ளதாகவும்,
திடீர் கட்டண உயர்வு நடுத்தர வர்க்கப் பயணிகளைப் பாதிக்கக்கூடும் எனவும் கூறியுள்ளார்.
எரிபொருள் விலையைக் கட்டுக்குள் வைக்கவும், விமானத் துறைக்குத் தேவையான ஆதரவை வழங்கவும் அரசு ஆலோசித்து வருவதாகவும் ஏர் இந்தியா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி தெரிவித்துள்ளார்.
















