திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டையில் ATM-ல் நிரப்ப எடுத்துச் சென்ற பணத்தை பறக்கும் படையினர் பறிமுதல் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில், மாநிலம் முழுவதும் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஐம்பதாயிரத்திற்கும் மேல் ஆவணங்களின்றி கொண்டு செல்லப்படும் பணம் அனைத்தும் பறிமுதல் செய்யப்படும் என தேர்தல் ஆணையம் ஏற்கனவே எச்சரித்துள்ளது.
இத்தகைய சூழலில் உரிய ஆவணங்கள் இல்லாமல் வங்கி ATM-ல் நிரப்புவதற்காக துப்பாக்கி ஏந்திய பாதுகாப்புடன் எடுத்துச் செல்லப்பட்ட மூன்று கோடியே நாற்பத்து நான்கு ரூபாயை பறக்கும் படையினர் பறிமுதல் செய்துள்ளனர்.
இந்த பணம், நிலக்கோட்டை வட்டாட்சியர் வசம் ஒப்படைக்கப்பட்ட நிலையில், இது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.
















