மறைந்த கிரிக்கெட் ஜாம்பவான் ஷேன் வார்னே, ராஜஸ்தான் ராயல்ஸ் அணியுடன் மேற்கொண்ட சாதுர்யமான ஒப்பந்தம், தற்போது பல நூறு கோடி ரூபாய் மதிப்பை எட்டியுள்ளது அனைவரையும் வியப்படைய செய்துள்ளது.
2008-ம் ஆண்டு ஐபிஎல் தொடங்குவதற்கு முன்பு, ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனாகவும் பயிற்சியாளராகவும் வார்னே நியமிக்கப்பட்டார்.
அப்போது தனது சம்பளத்திற்குப் பதிலாக, அணியின் பங்குகளில் ஒரு பகுதியை 0.75% பெறுவதற்கான ஒப்பந்தத்தை அவர் மேற்கொண்டார்.
ஆரம்பத்தில் மிகக் குறைந்த மதிப்பில் இருந்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் மதிப்பு, தற்போது பல நூறு கோடிகளாக உயர்ந்துள்ளது.
இதன் விளைவாக, வார்னேவின் வசம் இருந்த அந்தச் சிறிய பங்குத் தொகை தற்போது 450 கோடி ரூபாய்க்கும் மேல் வளர்ந்துள்ளது.
வார்னேவின் மறைவிற்குப் பிறகு, இந்த முதலீட்டின் பலன்கள் அவரது வாரிசுகளுக்குச் சென்றடையும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஒரு வீரராக மட்டுமன்றி, ஒரு சிறந்த முதலீட்டாளராகவும் வார்னே சாதித்துள்ளது தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
















