இந்திய அரசின் உயரதிகாரிகள் ஆரோவில் பயணம் மேற்கொண்டு நவீன நிர்வாகம் மற்றும் தலைமைத்துவம் குறித்து கலந்துரையாடினர்.
இந்திய அரசின் மிக முக்கியப் பிரிவுகளான பிரதமர் அலுவலகம், நிதி ஆயோக், நிதி அமைச்சகம் மற்றும் ரயில்வே அமைச்சகம் ஆகியவற்றிலிருந்து 28 உயரதிகாரிகள் டெல்லி ISTM பயிற்சி நிறுவனம் ஏற்பாடு செய்திருந்த ஆரோவில்லுக்கு ஆய்வுப் பயணம் மேற்கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் குஜராத் மாநில கூடுதல் தலைமைச் செயலாளரும், ஆரோவில் அறக்கட்டளைச் செயலாளருமான டாக்டர் ஜெயந்தி எஸ்.ரவி காணொலி காட்சி வாயிலாக அதிகாரிகளுடன் உரையாடினார்.
அரசுப் பணிகளில் நேர்மையையும், புதிய சிந்தனைகளையும் எவ்வாறு புகுத்தலாம் என்பது குறித்தும், ஆன்மிக விழிப்புணர்வு குறித்தும் விளக்கினார்.
தொடர்ந்து ஆரோவில் அறக்கட்டளை அதிகாரி டாக்டர் சஞ்சீவ் ரங்கநாதன் “ஆன்மா சார்ந்த” தலைமைத்துவம் பற்றி விளக்கினார்.
மேலும், உள்மனத் தெளிவு மற்றும் அர்ப்பணிப்பு குறித்து விவாதிக்கப்பட்டது.
இந்த பயணம் பயனுள்ளதாக இருந்ததால், இந்திய அரசுப் பணியில் சேரும் அதிகாரிகளுக்கு ஆரோவில்லில் நிரந்தரப் பயிற்சி அளிக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாகக் கூறினார்.
















