சென்னை அருகே, சிறையில் இருந்து ஜாமீனில் வெளிவந்த நபரை, 6 பேர் கொண்ட கும்பல் கொலை செய்ய முயன்ற சம்பவம், அப்பகுதியில் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
ரங்கனாதபுரம் பகுதியை சேர்ந்த கோல்டுமணி என்பவரின் வீட்டின் முன்பாக, நாட்டு வெடிகுண்டு வீசய வழக்கில் வினோத் என்பவர் கைது செய்யப்பட்டார்.
இதனால் சிறைக்கு சென்ற வினோத், நீதிமன்றத்தில் ஜாமீன் பெற்று வீடு திரும்பிய நிலையில், கோல்டுமணி மற்றும் அவரது நண்பர்கள் இணைந்து, வினோத்தை சரமாரியாக வெட்டிவிட்டு தப்பியோடினர்.
இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த பொதுமக்கள், அவரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், திருநீர்மலை காட்டுப் பகுதியில் பதுங்கியிருந்த கோல்டு மணி மற்றும் அவரது நண்பர்களை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இதற்கிடையே தங்கள் பகுதியில் கஞ்சா விற்பனை தலைவிரித்தாடுவதாகவும், அதனால்தான் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொள்வதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
















