சேலம் மாவட்டம், மேட்டூரில் சாலையில் நிறுத்தப்பட்டிருந்த நாதகவின் பரப்புரை வாகனத்தை அப்புறப்படுத்தக் கூறியதால் போலீசாருக்கும், கட்சியினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு அனைத்து கட்சியினரும் பரப்புரை பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
அந்த வகையில் மேச்சேரி பகுதியில் நாம்தமிழர் கட்சியின் சார்பில் பரப்புரை பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
இதற்கான வாகனங்கள் சாலையில் தயார் நிலையில் நின்று கொண்டிருந்தன.
இதனால் மேச்சேரி நகரப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இதனையறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் வாகனங்களை அப்புறப்படுத்துமாறு நாதகவினரிடம் தெரிவித்தனர்.
இதன் காரணமாக போலீசாருடன் கட்சியினர் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
















