தமிழகத்தில் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் முடிவுற்ற நிலையில், மாணவர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழகத்தில் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த 2ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வந்தது. தமிழகம் முழுவதும் அமைக்கப்பட்ட 3 ஆயிரத்து 412 தேர்வு மையங்களில் 8 லட்சத்து 27 ஆயிரத்து 475 மாணவர்கள் தேர்வெழுதினர்.
இந்நிலையில் இன்றுடன் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நிறைவடைந்தது. தொடர்ந்து தேர்வு மையங்களின் முன், மாணவர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
சேலத்தில் வண்ணப் பொடிகளை தூவி மாணவர்கள் நெகிழ்ச்சியுடன் விடைபெற்றனர்.
















