ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் கடற்பகுதியில் பவளப்பாறைகள் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
மீன்கள் வாழ்வதற்கான உறைவிடமாக பவளப்பாறைகள் அமைந்துள்ளன. தடை செய்யப்பட்ட வலைகளை பயன்படுத்துவது, விற்பனைக்காக வெட்டி எடுப்பது உள்ளிட்ட செயல்களால் பவளப்பாறைகள் அழிந்து வருகின்றன.
இதனை பாதுகாக்கும் விதமாக மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன. அதன்படி பிரதம மந்திரி நீர்வள மேம்பாட்டு திட்டத்தின்கீழ் 10 கோடி ரூபாய் செலவில்,
செயற்கை பவளப்பாறைகள் அமைக்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. ராமேஸ்வரம் கடற்பகுதியில் 26 ஆயிரம் செயற்கை பவளப்பாறைகள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
















