மேற்காசிய நிலவரம் குறித்து மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் மோடி இன்று ஆலோசனை நடத்த உள்ளார்.
மேற்காசிய நாடான ஈரான் மீது அமெரிக்காவும், இஸ்ரேலும் இணைந்து தாக்குதல் நடத்தி வருகின்றன. இதற்கு ஈரான் பதிலடி கொடுத்து வருகிறது. இதனால், மேற்காசிய பிராந்தியத்தில் போர் பதற்றம் நிலவுகிறது.
இதனால், உலகளவில் கச்சா எண்ணெய், எரிவாயு விநியோகத்தில் கடும் தட்டுப்பாடு நிலவுகிறது. இது குறித்து டெல்லியில் நடைபெற்ற அனைத்து கட்சி கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
இந்நிலையில், மேற்காசிய நிலவரம் குறித்து மாநில முதலமைச்சர்களுடன் இன்று மாலை, பிரதமர் மோடி காணொலி வாயிலாக ஆலோசனை நடத்த உள்ளார்.
போர்ச்சூழலில் மாநிலங்கள் தயாராக இருப்பது உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட உள்ளது. தற்போதைய சூழ்நிலையில் ‘ டீம் இந்தியா’ என்ற முறையில் ஒரே அணியாக செயல்படுவதை உறுதி செய்ய இந்த ஆலோசனை நடைபெறுகிறது.
















