ஹோர்முஸ் ஜலசந்தியை கட்டுப்பாட்டில் வைத்திருந்த, ஈரான் கடற்படை தளபதி அலிரேசா டங்சிரி கொல்லப்பட்டதாக இஸ்ரேல் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல் படையின் கடற்படை தளபதியான அலிரேசா டங்சிரி, கடந்த 2018-ம் ஆண்டு முதல், ஈரானின் கடற்படையை வழிநடத்தி வந்தார். இவர் ஹோர்முஸ் ஜலசந்தியை கட்டுப்பாட்டில் வைத்திருந்த ஈரான் படைகளுக்கு தலைமை வகித்ததாகவும் கூறப்படுகிறது.
கடந்த வாரம் இவர் வெளியிட்ட அறிக்கையில், அமெரிக்கா தொடர்புடைய எண்ணெய் களங்களும், ராணுவ தளங்களும் தாக்குதலுக்கு உள்ளாகும் என எச்சரிக்கப்பட்டிருந்தது.
இவரது தலைமையிலான படைகள் ஹோர்முஸ் ஜலசந்தியை முடக்கி கட்டுப்பாட்டில் வைத்துள்ளதன் காரணமாக, உலகளாவிய எரிசக்தி விநியோகத்தில் பாதிப்பு ஏற்பட்டதுடன், எண்ணெய் விலைகளும் கடுமையாக உயர்ந்துள்ளன.
இந்த நிலையில், பந்தர் அப்பாஸ் பகுதியில் இஸ்ரேல் படைகள் நடத்திய தாக்குதலில் அலிரேசா டங்சிரி கொல்லப்பட்டதாக இஸ்ரேல் ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது.
















