கொள்கைக்கூட்டணி எனக்கூறி திமுக மக்களை ஏமாற்றி வருவதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார்.
அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து தாம்பரத்தில் பரப்புரை மேற்கொண்ட அவர், திமுக கூட்டணியில் உள்ள அனைத்து கட்சிகளும் மாறுபட்ட கொள்கையை கொண்டுள்ளதாக தெரிவித்தார்.
தமிழகம், புதுச்சேரி என ஊருக்கேற்ப கொள்கையை மாற்றும் கட்சி திமுக என்றும், கூட்டணி கட்சிகளின் இடங்களை குறைத்து புதிதாக இணைந்தவர்களுக்கு அதிக இடங்கள் திமுக வழங்கியுள்ளதாக கூறினார்.
திமுக-வின் உண்மையான முகத்தை கூட்டணியில் உள்ள தலைவர்கள் புரிந்துகொள்ள வேண்டும் என்றும், திமுக-வின் மக்கள் விரோத ஆட்சிக்கு இந்த தேர்தலில் மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள் என்றும் இபிஎஸ் தெரிவித்தார்.
















