சென்னையை சேர்ந்த விசை படகை எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி ஆந்திர மீன் வளத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்ததால் காசி மேடு மீன்பிடி துறைமுக இயக்குநர் அலுவலத்தை மீனவர்கள் முற்றுகையிட்டனர்.
கடந்த 16 ஆம் தேதி அதிகாலை செந்தாமரை செல்வன் என்பவருக்கு சொந்தமான விசை படகில் 7 மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.
ஸ்ரீஹரிகோட்டா அருகில் மீன்பிடித்து கொண்டிருந்தபோது எல்லை தாண்டி வந்ததாக கூறி, 7 பேரும் கைது செய்யப்பட்டனர்.
பின்னர் மீனவர்களை விடுவித்த அதிகாரிகள் விசைபடகை மட்டும் திருப்பி அளிக்கவில்லை. இந்நிலையில் விசைப்படகின் உரிமையாளர் மற்றும் காசிமேடு அனைத்து மீனவர் சங்கத்தினர் காசிமேடு மீன்பிடி துறைமுக இயக்குனர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
















