ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு பேருந்து நிலைய நுழைவாயில் மீது திமுகவினர், தேர்தல் விதிமுறைகளை மீறி விளம்பர பேனர்களை ஒட்டிய சம்பவம் பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
பேருந்து நிலைய கட்டுமானப் பணிகள் முழுமை பெறாமல் பொதுமக்கள் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர்.
இந்நிலையில் விளம்பர பேனர் தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலானது.
இதையடுத்து, தேர்தல் விதிகளை மீறி ஒட்டப்பட்ட விளம்பர பேனரை நகராட்சி நிர்வாகத்தினர் அப்புறப்படுத்தினர்.
















