மதுரை மாவட்டம் அவனியாபுரத்தில் தேர்தலையொட்டி அவசர கதியில் தரமற்ற முறையில் தார் சாலை அமைக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
திருப்பரங்குன்றம் அடுத்த அவனியாபுரம் எஸ் ஆர் வி நகரில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு இரவோடு இரவாக தார் சாலை போடப்பட்டது.
இந்நிலையில் பல ஆண்டுகளாக போடப்படாமல் இருந்த சாலை, தேர்தல் தேதி அறிவிப்புக்கு பின்னர் இரவோடு இரவாக அவசரக் கதியில் தரமற்ற முறையில் போடப்பட்டதாக அப்பகுதியினர் குற்றச்சாட்டுகின்றனர்.
மேலும் தார் சாலை கையோடு பெயர்ந்து வருவதாகவும், தரமான முறையில் மீண்டும் சாலையை அமைத்து தர வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
















