பிரதமர் மோடியின் கேரளம் வருகையை முன்னிட்டு, கோவையின் முக்கிய பகுதிகளில் ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
கேரளம் மாநிலம் பாலக்காட்டில் பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி நாளை பிரசாரம் மேற்கொள்ள உள்ளார்.
இதற்காக நாளை கோவை விமான நிலையம் வரும் பிரதமர் மோடி, ஹெலிகாப்டர் மூலம் பாலக்காடு செல்கிறார்.
இதையொட்டி கோவை மாநகர் மற்றும் சிந்தாமணிபுதூர், செட்டிபாளையம், மதுக்கரை, எட்டிமடை, வாளையாறு உள்ளிட்ட பகுதிகள் சிவப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டு, அங்கு ட்ரோன்களை பறக்கவிட தடை விதிக்கப்பட்டுள்ளது.
















