சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டதால், தி.நகர் தொகுதி திமுக எம்.எல்.ஏ-வான கருணாநிதி தனது கட்சி பொறுப்பை ராஜினாமா செய்தார்.
தமிழக சட்டப்பேரவை தேர்தல் வரும் ஏப்ரல் 23-ம் தேதி நடைபெறவுள்ள நிலையில், ஆளும் கட்சியான திமுக இந்த தேர்தலில் 164 தொகுதிகளில் போட்டியிடவுள்ளது. இந்த சூழலில், திமுக-வின் வேட்பாளர் பட்டிலை முதலமைச்சர் ஸ்டாலின் நேற்று அறிவித்தார்.
அதன்படி, தி.நகர் தொகுதி எம்.எல்.ஏ-வான கருணாநிதி உட்பட தற்போது எம்.எல்.ஏ-க்களாக உள்ள 13 பேருக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டதாக தெரிகிறது. இந்த சூழலில், தேர்தலில் வாய்ப்பு மறுக்கப்பட்டதால் விரக்தியடைந்த திமுக எம்.எல்.ஏ கருணாநிதி, தனது தி.நகர் கிழக்கு பகுதி திமுக செயலாளர் பதவியை ராஜினாமா செய்தார்.
இது தொடர்பாக கட்சி தலைவரான முதலமைச்சர் ஸ்டாலினுக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், தனது பல ஆண்டுகால உழைப்புக்கும், நேர்மைக்கும், கட்சியின் மீது கொண்டிருந்த பற்றிற்கும் தற்போது மதிப்பில்லாத காரணத்தால் தனது கட்சி பொறுப்பை ராஜினாமா செய்வதாக தெரிவித்துள்ளார்.
















