சட்டமன்ற தேர்தலில் அதிமுக 200 தொகுதிகளுக்கு மேல் வென்று ஆட்சியமைக்கும் என மதுரை வடக்கு தொகுதி அதிமுக வேட்பாளரான மருத்துவர் சரவணன் தெரிவித்துள்ளார்.
மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், திமுக கொடுத்த வாக்குறுதிகளில் பாதியளவு கூட நிறைவேற்றவில்லை என தெரிவித்தார்.
திமுக ஆட்சியில் கட்டப்பட்ட நூலகம் 6 மாதங்கள் கூட தாக்குப்பிடிக்கவில்லை என்றும், தேர்தலில் அதிமுக மற்றும் திமுக ஆகிய கட்சிகளுக்கு இடையே தான் போட்டி என்றும் கூறினார்.
இந்த தேர்தலில் மக்கள் அதிமுக-விற்கு வாய்ப்பளிப்பார்கள் என்றும் அவர் குறிப்பிட்டார்.
















