திமுக வேட்பாளர் பட்டியலில் தனது பெயர் இடம்பெறாமல் போனதற்கு
அமைச்சர் கே.என்.நேருவின் அரசியல் காழ்ப்புணர்ச்சியே காரணம் என லால்குடி எம்.எல்.ஏ. செளந்தரபாண்டியன் பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ளார்.
திமுக-வை சேர்ந்த சௌந்தரபாண்டியன், லால்குடி சட்டமன்ற உறுப்பினராக 4 முறை வெற்றி பெற்றுள்ளார். இந்நிலையில், சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர் பட்டியலில் இவரது பெயர் இடம்பெறவில்லை.
இதனால் அதிர்ச்சியடைந்த சௌந்தரபாண்டியன், அமைச்சர் கே.என்.நேருவின் அரசியல் காழ்ப்புணர்ச்சியே இதற்கு காரணம் என குற்றம் சாட்டியுள்ளார். 4 முறை மக்களால் தான் தேர்வு செய்யப்பட்டதே நேருவுக்கு காழ்ப்புணர்ச்சியாக அமைந்துள்ளதாகவும், தன் மீது வேண்டுமென்றே புகார்கள் கூறி வந்ததாகவும் சௌந்தரபாண்டியன் குற்றம் சாட்டியுள்ளார்.
















