தாம்பரம் தொகுதியில் மீண்டும் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படாததால், எம்எல்ஏ எஸ்.ஆர்.ராஜாவின் ஆதரவாளர்கள் திமுக எம்பி டி.ஆர்பாலுவின் இல்லத்தை முற்றுகையிட்டனர்.
தாம்பரம் திமுக சட்டமன்ற உறுப்பினராக எஸ்.ஆர்.ராஜா உள்ளார். இத்தொகுதியில் போட்டியிட அவருக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. எனினும் தாம்பரம் தொகுதி திமுக வேட்பாளராக மருத்துவர் கிருத்திகா தேவியை அறிவித்து கட்சியின் தலைமை உத்தரவிட்டது.
இதனால் அதிருப்தி அடைந்த எஸ்.ஆர்.ராஜாவின் ஆதரவாளர்கள், இரும்புலியூரில் உள்ள திமுக எம்பி டி.ஆர்.பாலுவின் இல்லத்தை முற்றுகையிட்டனர்.
அப்போது தாம்பரம் தொகுதியில் போட்டியிட எஸ்.ஆர்.ராஜாவுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்க வேண்டுமென ஆதரவாளர்கள் முழக்கம் எழுப்பினர். இதேபோல் திமுகவின் முக்கிய நிர்வாகிகளுக்கு வாய்ப்பு வழங்கப்படாததால் அவர்கள், கட்சி தலைமை மீது அதிருப்தியில் உள்ளதாக கூறப்படுகிறது.
















