ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் மும்பை அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
ஐபிஎல் தொடரின் 2வது லீக் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. இதில், டாஸ் வென்ற மும்பை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
இதனையடுத்து கொல்கத்தா அணி வீரர்கள் முதலில் பேட்டிங் செய்தனர். அதிகபட்சமாக ரகானே 67 ரன்களும், ரகுவன்ஷி 51 ரன்களும் குவிக்கவே, அந்த அணி 4 விக்கெட் இழப்புக்கு 220 ரன்கள் குவித்தது. 221 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய மும்பை அணியின் வீரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
அதிரடியாக விளையாடிய ரியான் ரிக்கல்டன் 81 ரன்களும், ரோகித் சர்மா 78 ரன்களும் விளாசி அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்து சென்றனர்.
இதன் மூலம் 19.1 ஓவர்களிலேயே நிர்ணயிக்கப்பட்ட இலக்கை எட்டி மும்பை அணி வெற்றி பெற்றது. இந்த போட்டியின் மூலம் டி20 கிரிக்கெட்டில் 550 சிக்சர்கள் அடித்த ஒரே இந்திய வீரர் என்ற சாதனையை ரோஹித் சர்மா படைத்தார்.
















