குவைத்தில் உள்ள மின் உற்பத்தி நிலையம் மீது ஈரான் தாக்குதல் நடத்தியதில் ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரை சேர்ந்த நபர் உயிரிழந்தார்.
ஈரானில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக போர் நீடித்து வருகிறது. இந்நிலையில், குவைத்தில் உள்ள மின்சாரம் மற்றும் கடல்நீரை குடிநீராக்கும் நிலையம் மீது திங்கள் கிழமை அதிகாலை ஈரான் நடத்திய தாக்குதலில் இந்தியத் தொழிலாளி ஒருவர் கொல்லப்பட்டார்.
அவர் ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரைச் சேர்ந்த சந்தன செல்வம் என்பது தெரியவந்துள்ளது. தொடர்ந்து அவரின் உடலை தாயகம் கொண்டு வருதற்கான அனைத்துப் பணிகளையும் இந்திய தூதரகம் ஒருங்கிணைத்து வருவதாக கூறப்பட்டுள்ளது.
















