ஈரானுக்கு எதிரான நடவடிக்கையில் வெற்றி பெற்றுவிட்டதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் பேசிய அதிபர் டிரம்ப், ஒரு மாதம் நீடித்த “ஆபரேஷன் எபிக் ஃப்யூரி” குறித்த சமீபத்திய தகவல்களை எடுத்துரைத்தார்.
உலகிலேயே பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கைக்கு அரசு ரீதியாக ஆதரவளிக்கும் முதன்மையான நாடு அமெரிக்கா என்றும், கடந்த 4 வாரங்களாக அமெரிக்க ஆயுதப் படைகள் போர்க்களத்தில் விரைவாகவும், தீர்க்கமாகவும் செயல்பட்டு மிகப்பெரிய வெற்றியை பெற்று தந்துள்ளதாகவும் கூறினார்.
ஈரானின் கடல்சார் மற்றும் வான்வழித் திறன்களை அமெரிக்க படைகள் முற்றிலும் சிதைத்துள்ளதாகவும் கூறினார். அமெரிக்கா நடத்திய தாக்குதலில் ஈரானின் முக்கிய தலைவர்கள், பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாகவும் குறிப்பிட்டார்.
ஈரான் நாட்டின் பரந்த ராணுவக் கட்டமைப்பை அமெரிக்க படைகள் கடுமையாக சேதப்படுத்தியுள்ளது என்றும், ஆயுதத் தொழிற்சாலைகளையும், ராக்கெட் ஏவுதளங்களையும் அமெரிக்க படைகள் துண்டு துண்டாகச் சிதறடித்துள்ளதாகவும் அதிபர் டிரம்ப் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அதிபர் டிரம்ப், ஈரானுக்கு எதிரான ராணுவ நடவடிக்கைகள் 3 வாரங்களில் முடிவடையக்கூடும் என்றும், ஹோர்முஸ் ஜலசந்தி விவகாரத்தில் இனி அமெரிக்கா தலையிடாது எனவும் கூறினார்.
ஹோர்முஸ் கடல்வழியை பயன்படுத்தும் நாடுகளே அதன் பாதுகாப்பான பொறுப்பை ஏற்று கொள்ள வேண்டும் எனக்கூறியுள்ள டிரம்ப், போர் முயற்சிக்கு போதுமான ஆதரவு அளிக்காத கூட்டணி நாடுகள், கச்சா எண்ணெய் தேவையை அவர்களே பார்த்து கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார்.
2015ஆம் ஆண்டு அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா விலகியதே ஈரானிடம் மிகப்பெரிய அணு ஆயுதக் கிடங்கு உருவாக வழிவகுத்தது என குற்றம்சாட்டிய டிரம்ப்,
மோசமான அணு ஆயத ஒப்பந்தத்தை தாம் அதிபராக பொறுப்பே பின்பு ரத்து செய்ததாகவும் குறிப்பிட்டார்.
மேலும், வேறு எந்த அதிபரும் செய்ய முடியாத துணிச்சலான காரியத்தை தாம் வெற்றிகரமாக முடித்துள்ளதாகவும், முந்தைய அதிபர்கள் செய்த தவறுகளை தற்போது தாம் சரிசெய்து வருவதாகவும் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
















