மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி அருகே, எல்லை காழியப்பன்நல்லூர் கிராமத்தில் உள்ள ஸ்ரீ சொக்கநாத அய்யனார் கோயில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.
யாகசாலையில் இருந்து கடங்கள் புறப்பட்டு மங்கள வாத்தியங்கள் முழங்க, கோயிலை வலம் வந்து கும்ப கலசத்தை அடைந்தன.
பின்னர் கும்ப கலசத்தில் புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் விமர்சையாக நடைபெற்றது. இதில் தருமபுரம் ஆதீனம் 27-ஆவது குருமகா சன்னிதானம் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
















