வந்தவாசி அருகே, அடையாளம் தெரியாத வாகனம் மோதி பெண் உயிரிழந்த நிலையில், விபத்து ஏற்படுத்திய நபரை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்கக்கோரி குடும்பத்தினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
மருதாடு கிராமத்தைச் சேர்ந்த விநாயகமூர்த்தி என்பவரது மனைவி சரிதா, வந்தவாசி -மேல்மருவத்தூர் சாலை, கடைசிகுளம் கிராமம் அருகே நிகழ்ந்த விபத்தில் உயிரிழந்தார்.
படுகாயமடைந்த விநாயகமூர்த்தி சிகிச்சைக்காக வந்தவாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இந்நிலையில், விபத்து ஏற்படுத்தியவரை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்கக்கோரி அரசு மருத்துவமனை மற்றும் மருதாடு கிராமத்தில் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
















