பெரம்பலூரில் அமைந்துள்ள பாலமுருகன் கோயிலில், பங்குனி உத்திரத்தை முன்னிட்டு, பால்குட ஊர்வலம் விமர்சையாக நடைபெற்றது.
தெப்பக்குளம் ஐயப்பன் கோயில் பகுதியில் இருந்து புறப்பட்ட பால்குட ஊர்வலத்தில் ஏராளமான பக்தர்கள் பால்குடம் சுமந்து ஊர்வலமாக சென்றனர்.
சிலர் அலகு குத்தி, பால் காவடி சுமந்து, பம்பை உடுக்கை முழங்க ஊர்வலமாக பாலமுருகன் கோயிலுக்கு வந்தடைந்தனர். பின்னர் முருகனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
















