உத்தரகண்டை பின்பற்றி நாடு முழுவதும் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்த வேண்டும். சமூகத்தை ஒன்றிணைக்க இது மிகவும் அவசியம்,” என, ஆர்.எஸ்.எஸ்., தலைவர் மோகன் பாகவத் வலியுறுத்தி உள்ளார்.
கடந்த ஆண்டு ஜனவரியில், பொது சிவில் சட்டத்தை, நாட்டிலேயே முதல் மாநிலமாக உத்தரகண்ட் அமல்படுத்தியது. திருமணம் செய்யாமல் சேர்ந்து வாழும், ‘லிவ் இன்’ உறவுகளை பதிவு செய்வது கட்டாயம், குழந்தை திருமணத்துக்கு தடை விதிக்கப்பட்டது.
இந்நிலையில், உத்தரகண்ட் தலைநகர் டேராடூனில், முன்னாள் ராணுவத்தினர் பங்கேற்ற நிகழ்ச்சியில், பேசிய ஆர்.எஸ்.எஸ்., தலைவர் மோகன் பாகவத், உத்தரகண்டில் பொது சிவில் சட்டம் அமல்படுத்தப்பட்டதை பின்பற்றி, நாடு முழுதும் அந்த சட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்றும், இன்றைய கால கட்டத்துக்கு அந்த சட்டம் மிகவும் அவசியம் என்றார்.
















