பாஜக-வில் யாருக்கும் வாய்ப்பு மறுக்கப்படுவதில்லை, புறக்கணிக்கப்படுவதும் இல்லை என தமிழிசை சவுந் தரராஜன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், பாஜக வேட்பாளர் தேர்வில் எந்த பாரபட்சமும் இல்லை என தெரிவித்தார்
யாருக்கும் வாய்ப்பு மறுக்கப்படுவதில்லை, புறக்கணிக்கப்படுவதும் இல்லை என்றும், நீண்ட நாட்களாக கட்சிக்கு உழைத்தவர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.
வேட்பாளர் தேர்வில் இளைஞர்களுக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது என்றும், பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை போட்டியிட்டு இருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.
பாஜக தொண்டர்கள் அனைவரும் மகிழ்ச்சியோடு பணிபுரிந்து வருவதாகவும் தமிழிசை சௌந்தரராஜன் குறிப்பிட்டார்.
















