திருச்செந்தூர் சட்டமன்ற தொகுதியில், திமுக வேட்பாளரான அனிதா ராதாகிருஷ்ணனை எதிர்த்து விசிகவின் மாநில நிர்வாகி சுயேட்சையாக களம் இறங்கியிருப்பது அக்கூட்டணிக்குள் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருச்செந்தூர் தொகுதியில் திமுக சார்பில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மீண்டும் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்து பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார்.
இந்த தொகுதியில் சீட் கிடைக்காததால் அதிருப்தியடைந்த விசிக-வின் இளஞ்சிறுத்தைகள் எழுச்சி பாசறையின் மாநிலச் செயலாளர் முரசு தமிழப்பன் சுயேட்சையாக போட்டியிடப்போவதாக அறிவித்துள்ளார்.
















