தமிழக சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் இன்றுடன் நிறைவடைகிறது.
தமிழக சட்டப்பேரவை தேர்தல் வரும் 23ம் தேதி நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 30ம் தேதி தொடங்கியது.
முதல் நாளில் முதலமைச்சர் ஸ்டாலின், தவெக தலைவர் விஜய் உள்ளிட்ட 573 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர்.
2வது நாளில் சுமார் 800 பேரும், 3ம் நாளில் சுமார் 600 பேரும் வேட்புமனுக்களை தாக்கல் செய்தனர்.
இதன்மூலம், தமிழக சட்டமன்ற தேர்தலில் போட்டியிட இதுவரை 3 ஆயிரத்து 430 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.
இந்நிலையில், கடைசி நாளான இன்று பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சி வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்யவுள்ளனர்.
நாளை வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நடைபெறவுள்ள நிலையில், வரும் 9ம் தேதி இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படவுள்ளது.
















