மக்களின் கஷ்டங்கள் தெரியாமல் ஆட்சி நடத்தியவர் ஸ்டாலின் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.
சேலம் மாவட்டம் ஆத்தூரில் பேசிய அவர், நடைபயணம் செல்லும் போது கூட தனது குடும்பத்தை பற்றி மட்டுமே சிந்திப்பவர் ஸ்டாலின் என தெரிவித்தார். மக்களுக்கு துரோகம் செய்யும் கட்சி திமுக என்றும், மக்களிடம் கொள்ளையடிப்பது மட்டுமே திமுக ஆட்சியின் குறிக்கோள் என்றும் அவர் கூறினார்.
தமிழக மக்களை கடனாளியாக்கியது திமுக ஆட்சி என்றும், திமுக ஆட்சியில் விண்ணை முட்டும் அளவிற்கு விலைவாசி உயர்ந்துள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.
அதிமுக ஆட்சியில் சட்டம் – ஒழுங்கு சிறப்பாக இருக்கும் என்றும், திமுக ஆட்சியில் சிறுமிகள் முதல் மூதாட்டி வரை யாருக்கும் பாதுகாப்பு இல்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.
திமுக ஆட்சியில் போதை ஆசாமிகளின் அட்டகாசம் அதிகரித்துள்ளதாகவும் இபிஎஸ் தெரிவித்தார்.
















