ஈரான் மீது இரண்டு வாரங்களுக்கு தாக்குதல் நடத்தப்படாது என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
ஹோர்முஸ் நீரிணையை திறக்க வேண்டும் என வலியுறுத்தி அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ஈரானுக்கு தொடர்ச்சியாக கெடு விதித்து வந்தார். ஆனால், இந்த விவகாரத்தில் உரிய முடிவு எட்டப்படாத நிலையில், விரக்கியடைந்த ட்ரம்ப், ஈரான் பேரழிவை சந்திக்க போவதாக கடுமையாக எச்சரித்தார்.
ஈரானின் ஒரு நாகரிகமே அழியப்போவதாக ட்ரம்ப் கூறியது, அணு ஆயுத தாக்குதலாக இருக்குமோ என்ற அச்சத்தை தூண்டியது. இந்நிலையில், ஈரானுக்கு விதிக்கப்பட்ட கெடுவை மேலும் இரண்டு வாரங்களுக்கு நீட்டிக்க ட்ரம்ப் முடிவெடுத்துள்ளார்.
இந்த இரண்டு வாரங்களும் ஈரான் மீது தாக்குதல் நடத்தப்படாது என்றும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். போரை முடிவுக்கு கொண்டு வர ஈரான் முன்மொழிந்துள்ள 10 அம்ச கோரிக்கையை வரவேற்பதாகவும் ட்ரம்ப் கூறியுள்ளார்.
















