சிதம்பரம் காந்தி சிலை அருகே அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் அமைப்பு சார்பில் நடந்த பொதுக்கூட்டத்தில் விசிகவினர் புகுந்து அராஜகத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கடலூர் மாவட்டம் சிதம்பரம் காந்தி சிலை அருகே அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் அமைப்பு சார்பில் மாணவர்களின் குரல், மாற்றத்திற்கான குரல் என்ற தலைப்பில் பொதுக்கூட்டம் நடந்தது. பொதுக்கூட்டத்தில் வட தமிழகம் மாநில செயலாளர் பன்னீர்செல்வம் பேசிக் கொண்டிருக்கையில், விடுதலை சிறுத்தைகள் கட்சியை சார்ந்த நபர்கள் மதுபோதையில் வந்து, ABVP பொறுப்பாளர்களை தகாத வார்த்தைகளால் பேசினர்.
மேடையில் நாற்காலியை தூக்கி எறிந்து தாக்குதல் நடத்தினர். மேலும் மத்திய செயலாக்கு குழு உறுப்பினர் வேதாஞ்சலியை தகாத வார்த்தைகளால் பேசி அவமரியாதை செய்தனர். பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற மாணவர்கள் மீதும் தாக்குதல் நடத்தி இடையூறு செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
















