விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த முடியாத பொம்மை முதலமைச்சராக ஸ்டாலின் உள்ளார் என் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.
சென்னை அண்ணா நகரில் அதிமுக வேட்பாளர் கோகுல இந்திராவை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்ட அவர், தமிழ்நாட்டில் குழந்தைகள், பெண்கள், மூதாட்டிக்குக் கூட பாதுகாப்பில்லை என தெரிவித்தார்.
கிராமங்கள், நகரங்கள் என எங்கு பார்த்தாலும் போதைப்பொருள் அதிகரித்துவிட்டதாகவும் அவர் கூறினார்.
ஊழல், கொள்ளையடிப்பதில் திமுக அரசு முதலிடம் என்றும், கடன் வாங்கி கொள்ளையடித்த திமுக அரசு தொடர வேண்டுமா? என்றும் அவர் சாடினார் ஒரே மேடையில் முதலமைச்சர் ஸ்டாலின் என்னுடன் விவாதிக்க தயாரா? என்றும் இபிஎஸ் சவால் விடுத்தார்.
















